தேவையானப் பொருட்கள்
- ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) – முழுசு ஒன்று
- வெங்காயம் – ஐந்து (பெரியது)
- தக்காளி – நான்கு (பெரியது)
- பச்சமிளகய் – 4
- இஞ்சி, போண்டு பேஸ்ட் – 5 டேபுள் ஸ்பூன்
- கொத்து மல்லி – கால் கட்டு
- புதினா – கொஞ்சம்
- மிளகாய் தூள் – இரண்டரை டீஸ் பூன்
- தனியா தூள் – இரண்டரை டேபூள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- தேங்காய் – அரை முறி
- எண்ணை – 5 டீஸ்பூன்
- பட்டை,லவங்கம், ஏலம் தலா – இரண்டிரண்டு
- கத்திரிக்காய் – அரை கிலோ
- கடலைப்பருப்பு – கால் கப்

|
செய்முறை
- குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
- கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
- சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள் வெங்காயத்தை வத்க்கவும்.
- வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
- அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
- வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
- போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.
|
குறிப்பு:
நல்ல வேகவைக்கனும். (ஆட்டு காலும், குடலும் வேக நேரமாகும்)இந்த இரண்டு அயிட்டமும் வேக குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் குக்க்கரில் செய்யும் போது தண்ணிர் கம்மியாக வைத்தால் எல்லாம் அடியில் ஒட்டிக்கொள்ளும் முங த்ண்ணிர் ஊற்றி இரண்டு மூன்று விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும் ஆவி ந்ன்றாக அடங்கியபிறகு தான் குக்கரைத் திறக்கனும்