செய்முறை
- சோம்பு,சீரகம்,மஞ்சள்தூள்,கசகசா,இஞ்சி,பூண்டு, எல்லாவற்றையும் அரைத்து கறியில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணைய் விட்டு பட்டை கிரம்பு,ஏலக்காய்,சோம்பை தாளிக்கவும்.
- பிறகு பொடியாக அரிந்த வெங்காயம், கீறிய ப.மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு தக்காளி, கருவேப்பிலை போட்டு கறிக்கலவை கொட்டி நன்கு கிளர வேண்டும்.வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூட வேண்டும்.
- தண்ணீர் வற்றியவுடன் மிளகு தூள் சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
|